Friday, 14 October 2016

108 முருகர் போற்றி


108 முருகர் போற்றி 

கருணை கடலே கந்தா போற்றி 
 

ஓம் அழகா போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அயன்மால் மருகா போற்றி
ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
ஓம் பன்னிருகை வேலவா போற்றி
ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி
ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடர் களைவோனே போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஓம்கார சொருபனே போற்றி
ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி
ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி
ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி
ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி
ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி
ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி
ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
ஓம் ஏழாவதுபடை விடுடையவா போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி
ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் மருதமலை இறைவா போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி
ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி
ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி
ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி
ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி
ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
ஓம் சரவணபவ சண்முகா போற்றி
ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி
ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி
ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி
ஓம் யோக சித்தியே அழகே போற்றி
ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி
ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி
ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி
ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி
ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி
ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி
ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
ஓம் துதிபுரி அன்ªபன் துணையே போற்றி
ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி
ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி
ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி
ஓம் அவ்வையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி
ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி
ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி
ஓம் மருதமலை ஆண்டவா போற்றி
ஓம் போற்றி... போற்றி... மருதமலை வேலவா போற்றி
 

Saturday, 8 October 2016

108 பெருமாள் போற்றி


108 பெருமாள் போற்றி

ஓம் நமோ நாராயணாய

OM ANANTHA NAADHAA POTRI                         ஓம் அனந்த நாதா போற்றி 

OM AYYODHDHI RAAJAA POTRI                         ஓம் அயோத்தி ராஜா போற்றி
OM ACHCHUDHAA POTRI                                     ஓம் அச்சுதா போற்றி
OM AZHAGARMALAI AZHAGHAA POTRI              ஓம் அழகர்மலை அழகா போற்றி

OM ANANTHASAYANAA POTRI                              ஓம் அனந்த சயனா போற்றி
OM ANANDHAAYA POTRI                                        ஓம் அநந்தாயா போற்றி
OM AALILAIKANNA POTRI                                       ஓம் ஆலிலைக் கண்ணா போற்றி
OM AADHISHESHAA POTRI                                      ஓம் ஆதிசேஷா போற்றி
OM AADHITHYAA POTRI                                           ஓம் ஆதித்யா போற்றி
OM LAKSHMIVAASAA POTRI                                  ஓம் இலட்சுமிவாசா போற்றி
OM KAARVANNAA POTRI                                         ஓம் கார்வண்ணா போற்றி

OM KAALINGANARDHANAA POTRI                         ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
OM GARUDA VAAHANANAE POTRI                          ஓம் கருட வாகனனே போற்றி
OM KAMALAKKANNAA POTRI                                  ஓம் கமலக்கண்ணா போற்றி
OM GOVINDHAA POTRI                                           ஓம் கோவிந்தா போற்றி
OM GOPALAA POTRI                                                ஓம் கோபாலா போற்றி
OM GOPINAADHAA POTRI                                       ஓம் கோபிநாதா போற்றி
OM GOVARDHANAA POTRI                                      ஓம் கோவர்த்தனா போற்றி
OM GOKULAVAASAA POTRI                                     ஓம் கோகுலவாசா போற்றி
OM GOPIYAR NAESAA POTR                                ஓம் கோபியர் நேசா போற்றி
OM KESAVAA POTRI                                                 ஓம் கேசவா போற்றி

OM MAADHAVAA POTRI                                             ஓம் மாதவா போற்றி
OM MADHUSOODHANAA POTRI                               ஓம் மதுசூதனா போற்றி
OM MADHURANAADHAA POTRI                            ஓம் மதுராநாதா போற்றி
OM MAAMALAIVAASAA POTRI                              ஓம் மாமலைவாசா போற்றி
OM MALAYAPPAA POTRI                                       ஓம் மலையப்பா போற்றி
OM MANIVANNAA POTRI                                      ஓம் மணிவண்ணா போற்றி
OM MAAYAVAA POTRI                                            ஓம் மாயவா போற்றி
OM MUKUNDHAA POTRI                                         ஓம் முகுந்தா போற்றி
OM MOHANASUNDARAA POTRI                            ஓம் மோகனசுந்தரா போற்றி
OM PADMANAABHAA POTRI                                   ஓம் பத்மநாபா போற்றி

OM PARAMAATHMAA POTRI                                   ஓம் பரமாத்மா போற்றி
OM PARANDHDHAAMAA POTRI                              ஓம் பரந்தாமா போற்றி
OM PARABHBRAMMAH POTRI                              ஓம் பரபிரம்மா போற்றி
OM BAKTHAVAKSALAA POTRI                                ஓம் பக்தவச்சலா போற்றி
OM PARTHASAARATHY POTRI                                ஓம் பார்த்தசாரதி போற்றி
OM BAALACHANDRAA POTRI                                 ஓம் பாலச்சந்திரா போற்றி
OM PAARKADALVAASAA POTRI                              ஓம் பாற்கடல்வாசா போற்றி
OM NAVANEETHAKRISHNAA POTRI                        ஓம் நவநீத கிருஷ்ணா போற்றி
OM NANDHA GOPALAA POTRI                                  ஓம் நந்த கோபால போற்றி
OM NANDHA MUKUNDHAA POTRI                            ஓம் நந்த முகுந்தா போற்றி

OM NANDHA KUMAARAA POTRI                             ஓம் நந்த குமாரா போற்றி
OM NARASIMHAA POTRI                                        ஓம் நரசிம்மா போற்றி
OM NAARAYANAA POTRI                                       ஓம் நாராயணா போற்றி
OM NAMO NAARAYANAA POTRI                            ஓம் நமோ நாராயணா போற்றி
OM THIRU NAARAAYANAA POTRI                         ஓம் திரு நாராயணா போற்றி
OM LAKSHMI NAARAYANAA POTRI                      ஓம் லட்சுமி நாராயணா போற்றி
OM DEVAKHI NANDHANAA POTRI                         ஓம் தேவகி நந்தனா போற்றி
OM DHAAMODHARAA POTRI                                ஓம் தாமோதரா போற்றி
OM THRIVIKRAMAA POTRI                                  ஓம் திருவிக்கிரமா போற்றி
OM RAAMAKRISHNAA POTRI                              ஓம் ராமகிருஷ்ணா போற்றி

OM RAAJAGOPAALAA POTRI                              ஓம் ராஜகோபாலா போற்றி
OM RAAMACHANDRAA POTRI                            ஓம் ஸ்ரீராமச்சந்திரா போற்றி
OM RAGHUNAADHAA POTRI                                ஓம் ரகுநாதா போற்றி
OM VENUGOPAALAA POTRI                                 ஓம் வேணுகோபாலா போற்றி
OM DHEENADHAYAALAA POTRI                          ஓம் தீனதயாளா போற்றி
OM SATHYANAARAAYANAA POTRI                    ஓம் சத்திய நாராயணா போற்றி
OM SOORYANAARAYANAA POTRI                      ஓம் சூரிய நாராயணா போற்றி
OM NAMO NAARAAYANAA POTRI                      ஓம் நமோ நாராயணா போற்றி
OM SREEDHARAA POTRI                                     ஓம் ஸ்ரீதரா போற்றி
OM THIRUVAENKATAA POTRI                              ஓம் திருவேங்கடா போற்றி

OM THIRUMALAIVAASAA POTRI                         ஓம் திருமலைவாசா போற்றி
OM MURALIDHARAA POTRI                                ஓம் முரளீதரா போற்றி
OM VAIKUNTHAVAASAA POTRI                          ஓம் வைகுந்தவாசா போற்றி
OM LAKSHMINAADHAA POTRI                            ஓம் ஸ்ரீலட்சுமி நாதா போற்றி
OM VAASUDEVAA POTRI                                    ஓம் வாஸுதேவா போற்றி
OM YASODHA VATHSALAA POTRI                     ஓம் யஸோத வத்சலா போற்றி
OM VAAMANAA POTRI                                      ஓம் வாமனா போற்றி
OM THIRUVARANGANAADHA POTRI                  ஓம் திருவரங்க நாதா போற்றி
OM HAYAGREEVAA POTRI                                 ஓம் ஹயகிரீவா போற்றி
OM CHAKKARATHTHAAZHVAARE POTRI           ஓம் சக்கரத்தாழ்வாரே போற்றி

OM DHANVANTHTHIRIYAE POTRI                      ஓம் தன்வந்த்ரியே போற்றி
OM JAGANNAADHAA POTRI                              ஓம் ஜெகன்நாதா போற்றி
OM KALIYUGAVARADHAA POTRI                      ஓம் கலியுகவரதா போற்றி
OM VARADHARAAJAA POTRI                           ஓம் வரதராஜா போற்றி
OM SOUNDARARAAJAA POTRI                          ஓம் சௌந்தரராஜா போற்றி
OM GURUVAAYOORAPPAA POTRI                     ஓம் குருவாயூரப்பா போற்றி
OM SAARANGAPAANIYAE POTRI                      ஓம் சாரங்கபாணியே போற்றி
OM YASODHAI MAINDHANAEY POTRI               ஓம் யசோதை மைந்தனே போற்றி
OM BALARAAMAA POTRI                                 ஓம் பலராமா போற்றி
OM PARASURAAMAA POTRI                             ஓம் பரசுராமா போற்றி

OM JAYARAAMAA POTRI                                 ஓம் ஜெயராமா போற்றி
OM BAALAMUKUNDHAA POTRI                          ஓம் பாலமுகுந்தா போற்றி
OM PAANDURANGAA POTRI                              ஓம் பாண்டுரங்கா போற்றி
OM PANDARINAADHAA POTRI                          ஓம் பண்டரிநாதா போற்றி
OM PUNNIYANAEY POTRI                                   ஓம் புண்ணியனே போற்றி
OM BAKTHANAADHA POTRI                              ஓம் பக்த நாதா போற்றி
OM KOKILANAADHA POTRI                               ஓம் கோகிலநாதா போற்றி
OM BHASKARAA POTRI                                    ஓம் பாஸ்கரா போற்றி
OM VISHNAVAEY POTRI                                    ஓம் விஷ்ணவே போற்றி
OM SRIRANGANAADHAA POTRI                       ஓம் ஸ்ரீரங்கனாதா போற்றி

OM PASUBAALAKRISHNAA POTRI                    ஓம் பசுபாலகிருஷ்ணா போற்றி
OM NARANAARAAYANAA POTRI                     ஓம் நரநாராயணா போற்றி
OM THULASIDHAASAA POTRI                          ஓம் துளஸீதாசா போற்றி
OM MURALEEDHARAA POTRI                           ஓம் முரளீதரா போற்றி
OM DHAYAANIDHIYAE POTRI                          ஓம் தயாநிதியே போற்றி
OM YASODHA VATHSALAA POTRI                   ஓம் யஸோத வத்ஸலா போற்றி
OM HRUSHEEKESHAA POTRI                             ஓம் க்ருக்ஷிகேசா போற்றி
OM VAAMANAA POTRI                                     ஓம் வாமனா போற்றி
OM VARAAHAA POTRI                                     ஓம் வராகா போற்றி
OM NAAGARAAJANAEY POTRI                         ஓம் நாகராஜனே போற்றி

OM BADHRI NAARAAYANAA POTRI                 ஓம் பத்ரி நாராயணா போற்றி
OM SATHYANAARAAYANAA POTRI                 ஓம் ஸத்ய நாராயணா போற்றி
OM HARI NAARAAYANAA POTRI                     ஓம் ஹரி நாராயணா போற்றி
OM SACHCHIDHAANANDHANAEY POTRI          ஓம் ஸச்சிதானந்தனே போற்றி
OM DUSHTA SAMHAARAHAA POTRI               ஓம் துஷ்ட ஸம்ஹாரக போற்றி
OM THURIDHA NIVAARANAA POTRI               ஓம் துரித நிவாரண போற்றி
OM SRI VENKATESAA POTRI POTRI                ஓம் ஸ்ரீ வேங்கடேசா போற்றி போற்றி.


108 சிவம் போற்றி


108 சிவம் போற்றி 

ஓம் நம சிவாய



அலகில் சோதியனே போற்றி
அர்த்த நாரிசனே போற்றி
அருணாசலனே போற்றி
அம்பலவாணனே போற்றி 
ஆலவாய் அழகனே போற்றி
ஆடிய பாதமே போற்றி
ஆனந்த்க்கூத்தனே போற்றி 
இடபவாகனனே போற்றி 
இடர்தனைத்தீர்ப்பவனே போற்றி
ஈசனே போற்றி                                                     10

ஈங்கோய்மலை நாதனே போற்றி
உயிரே போற்றி
உடலே போற்றி 
உலகநாதனே போற்றி
உமையாள்பாகனே போற்றி 
ஊர்த்துவத் தாண்டவனே போற்றி
ஊனைப்படைத்தோனுக்கும் அருள்பவனே போற்றி 
எந்தையே போற்றி 
எமபயம் தீர்ப்பவனே போற்றி 
ஏகாந்தமானவனே போற்றி                                 20 

எகாம்பரநாதனே போற்றி 
ஐங்கரன் தந்தையே போற்றி
ஐந்தொழில் புரிபவனே போற்றி
ஒளியே போற்றி 
ஒலியே போற்றி 
ஓம் சக்தி நாதனே போற்றி 
ஓங்கார நாதனே போற்றி
ஔடதமே போற்றி 
ஔவைக்கருள் செய்தவளே போற்றி 
கலையே போற்றி                                                30

கடலே போற்றி
கருவே போற்றி
கனலே போற்றி
கங்காதரனே போற்றி
கைலாசநாதனே போற்றி
காலகண்டனே போற்றி 
காமாட்சிப்ரியனே போற்றி
குருவே போற்றி
குவலயமே போற்றி
குஞ்சிதபாதனே போற்றி                                      40

சடைமுடியோனே போற்றி 
சட்டநாதனே போற்றி 
சரபமாய்த்தோன்றியவனே போற்றி 
சண்முகன் தந்தையே போற்றி 
சச்சிதானந்தனே போற்றி 
சத்குருவே போற்றி 
சங்கரனே போற்றி
சிவனே போற்றி
சீலமே போற்றி 
சோதியே போற்றி                                                  50 

சுடரே போற்றி 
சைலநாதனே போற்றி
சேய்தனைக்காப்பவனே போற்றி 
சிதம்பரனாதனே போற்றி
சிவகாமி மணாளனே போற்றி
தருவே போற்றி 
தகவே போற்றி
தண்ணொளியே போற்றி
தயாபரனே போற்றி 
தாண்டவமூர்த்தியே போற்றி                               60 

தாட்சாயணி நாதனே போற்றி 
திங்களைத்தரித்தவனே போற்றி
திரிபுரம் எரித்தவனே போற்றி
நிதியே போற்றி
நிமலனே போற்றி
நீலகண்டனே போற்றி 
நீலாயதாட்சி நாதனே போற்றி 
நீல்விழியாள் நாதனே போற்றி
நீங்காத நினைவே போற்றி
நீர்மலிவேணியனே போற்றி                                 70 

நீள்சடையோனே போற்றி 
நெற்றிக்கண்ணனே போற்றி 
நேசமாய்த்திகழ்பவனே போற்றி 
பசுபதியே போற்றி
பனிமலையே போற்றி 
பரம்பொருளே போற்றி 
பருப்பொருளே போற்றி 
பார்வதி நாதனே போற்றி 
புலித்தோல் அணிந்தவனே போற்றி 
பிட்டுக்கு மண் சுமந்தவனே போற்றி                  80 

பிணியைத்தீர்ப்பவனே போற்றி 
மஞ்சு நாதனே போற்றி 
மணிகண்டன் தந்தையே போற்றி
மலைமகள் நாயகனே போற்றி
மன்மதனை எரித்தவனே போற்றி
மால்மருகன் தந்தையே போற்றி
மல்லிகார்ஜுனனே போற்றி 
முதலே போற்றி 
முடிவே போற்றி 
முக்கண்ணனே போற்றி                                        90

முடியடி காணா முதல்வனே போற்றி 
மேருவே போற்றி 
மேகநாதனே போற்றி 
மோனமே போற்றி 
மோட்சமளிப்பவனே போற்றி 
வளர்பிறை அணிந்தவனே போற்றி 
வன்மீகனாதனே போற்றி 
வாஞ்சினாதனே போற்றி 
விடமுண்ட கண்டனே போற்றி 
விஸ்வநாதனே போற்றி                                     100

வைத்யனாதனே போற்றி 
வீரமே போற்றி 
வெற்றியே போற்றி 
வெண்மதி தரித்தவனே போற்றி
வேதமே போற்றி 
வேள்வியே போற்றி
வேல்முருகன் தந்தையே போற்றி 
வேண்டும் வரம் அருள்பவனே போற்றி           108 

போற்றி போற்றி

ஜோதிட விளக்கம் 2


ஜோதிட விளக்கம் 2:

அனைவருக்கும் வணக்கம்,

இன்றய பதிவில் சில முக்கியமான விசயங்களை நாம் பார்க்க போகிறோம்..

சென்ற பதிவில் மேலே உள்ள ராசி கட்டத்தில் உள்ள கிரகங்கள் அந்த அந்த ராசி கட்டத்தின் அதிபதிகள் என்று சொல்லிருந்தேன் ..எதாவது சந்தேகங்கள் இருந்தால் comment  பண்ணுங்க .. நிச்சயம் அதை பற்றி விவாதிக்கலாம்..

இந்த பதிவில் கிரங்களின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்வோம் கிரங்களின் தன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம் ...

பொதுவாக ஜாதகங்களில் உள்ள கிரகங்களை பற்றி மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் ..என்ன என்ன கிரகங்கள் உள்ளன ?
சூரியன் ,சந்திரன்,புதன் ,சுக்கிரன்,செவ்வாய், குரு,சனி  இல்லையா ...மற்றும் ராகு , கேது இவை இரண்டும் நிழல் கிரகங்கள்(விரிவாக மற்றோரு பதிவில் பார்க்கலாம் )...

நீங்கள் அந்த மேலே உள்ள ராசி கட்டத்தை உற்று நோக்கினால் சூரியனுக்கும் ,சனி கிரகத்துக்கும் உள்ள தொலைவு அதிகமாக இருக்கும் அவ்வாறு இருக்கும் போது சூரியனையுடைய ஒளி சனி கிரகத்தின் மீது அமையாது என்பதை அறிவியல் ரீதியாக நம் பெரியோர்கள் காண்பித்துள்ளார் அதன் அடையாளமாகவே சனி கிரகத்தை இருள் கிரகம் என்றும் அதற்கு கருப்பு நிறம் ஆடை , எள்ளு ஆகியவற்றை படைக்கின்றனர்..ஆதாலால் நம் முன்னோர்கள் நமக்கு காண்பித்த சம்பர்தாயங்களை புறக்கணிக்காமல் அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் ஆராய்ந்து செயல் பட வேண்டும் ...இது மிகவும் முக்கியமான ஒன்று..தயவு செய்து மேலை நாட்டு கலாசாரத்தில் மூழ்கி நமது பாரம்பரியத்தை மறந்துவிடாதீர்கள் ....அப்படிப்பட்ட அந்த மேலை நாடுகளே வேதிக் அஸ்ட்ரோலாஜி என்று சொல்லப்படும் நம் முன்னோர்களின் வேதங்களையும் சாஸ்தரங்ககளையும் படித்து ஆராய்சி செய்கின்றனர்..

நமது கடவுளை தேடி இந்தியா  வருகின்றனர்...காசியில் கங்கைக்கு வந்து தலை முழுகி  புண்ணியம் தேடுகின்றனர்...

சரி பாடத்துக்கு வருவோம் ,

கிரகங்கிளின் தன்மைகள்   மற்றும் காரகங்கள்   


நவகிரகங்கள்

இந்திய ஜோதிடம் ஒன்பது முக்கிய கிரகங்களை கொண்டுள்ளது. அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு மற்றும் கேது ஆகியனவாகும்.

சூரியன்

நவகிரகங்களில் முக்கியமானதும் ஆத்ம காரகன் மற்றும் தகப்பன் காரகனும் சூரியன் ஆகும். சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் இருக்கிறது. ஒரு வருடத்தில் 12 ராசிகளையும் சுற்றி மார்ச் 21 ல் மேஷத்திற்குள் மீண்டும் வருகிறது (இந்திய ஜோதிடப்படி ஏப்ரல் 14). இதன் நட்பு கிரகங்கள் சந்திரன், செவ்வாய், வியாழன். பகை கிரகங்கள் வெள்ளி, சனி ஆகும். புதன் சம கிரகம் ஆகும். இது மேஷம் 10 பாகையில் உச்சம் பெறுகிறது, துலாம் 10 பாகையில் நீசம் பெறுகிறது, சிம்மம் 0-20 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இது ஒரு சுபாவ பாப கிரகம் ஆகும். மேலும் இதன் காரக்துவங்கள் உடல் வலிமை, தைரியம், கசப்பு சுவை, நிலம், மோட்சம், ஆத்மா, தந்தை, தந்தையின் நலன்கள், அரசன், அரச உதவி, உயர்ந்த நிலை, மன சுத்தம், அரசாங்கம், பயணங்கள், கோடை, நெருப்பு, கற்கள், புல், காடு, மலை, ஆற்றங்கரை, முகம், கோபம், தலைமை, மருத்துவர், தங்கம், தாமிரம், முத்து, மூங்கில், வெற்றி, சிவப்பு. மருத்துவத்தில் வயிறு, பித்த நீர், வலது கண், காய்ச்சல், எலும்பு, எரிச்சல், தலை நோய், வழுக்கை தலை, பித்த சம்பந்தமான வியாதி, கீழே விழுந்து காயமடைதல், காக்காய் வலிப்பு, நான்கு கால் விலங்குகளால் காயம்.

சந்திரன்

பூமியின் துணை கோள் ஆன சந்திரன் பூமியிலிருந்து சுமார் 3 லட்சம் கி.மீ தொலைவில் பூமியை சுற்றி வருகிறது. இது 29.5 நாட்களில் 12 ராசிகளையும் சுற்றிவிடுகிறது. பிறக்கும்போது சந்திரன் இருக்கும் ராசியே ஒருவரின் ஜன்ம ராசியாகும். சூரியன், புதன் இதன் நட்பு கிரகங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி சம கிரகங்கள். இது ரிஷபம் 3 பாகையில் உச்சமும், விருச்சிகம் 3 பாகையில் நீசமும், ரிஷபம் 4-20 பாகையில் மூலத்திரிகோண பலமும் பெறுகிறது. இது இயற்கை சுப கிரகமாகும் (வளர்பிறையாக இருந்தால்). இதன் காரகதுவங்கள் தாயார், தாயார் மூலம் கிடைக்கும் நன்மை, அழகு, முக காந்தம், புகழ், மகிழ்ச்சி, வாகனம், மனம், அறிவு, நகைச்சுவை, பெண்களிடம் ஈடுபாடு, நிறைவு, தூக்கம், திரவம், தண்னீர், பால், தயிர், தேன், உப்பு, சுவையான பழம், மீன் மற்றும் நீர்வாழ்வன, பாம்பு மற்றும் ஊர்வன, பூக்கள், வாசனை திரவியம், வெண்மை, துணி, வெள்ளி, பித்தளை, முத்து, அரச முத்திரை, கிணறு, ஏரி, புனிதபயணம், கூச்சம், கனிவு, காதல், கோதுமை, அரிசி, கரும்பு, உப்பு, பிராமணர்கள், வட கிழக்கு, மழை காலம், நடுத்தர வயது.

செவ்வாய்

சிகப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் சூரியனிலிருந்து நான்காவதாக உள்ளது. சூரியனிலிருந்து இதன் தொலைவு 227,900,000 கிலோமீட்டர்களாகும். இது ஒரு ராசியை கடக்க சுமார் 43 நாட்கள் ஆகிறது. இது மகரம் 28 பாகையில் உச்சமும், கடகம் 28 பாகையில் நீசமும், மேஷம் 0-12 பாகையில் மூலத்திரிகோண பலமும் பெறுகிறது. சூரியன், சந்திரன், வியாழன் இதன் இயற்கை நண்பர்கள், புதன் எதிரி, வெள்ளி, சனி சம கிரகங்கள். இது சுபாவ பாப கிரகம் ஆகும். இதன் காரகங்கள் தைரியம்,சகோதரன், வீரம், கோபம், உடல் வலிமை, ஆக்ரோஷம், போர், ஆட்சி திறமை, ஆயுதங்கள் பயன்படுத்தும் திறமை, தலைமை பண்பு, புகழ், வெற்றி, குரூரம், வாள், அறுவை சிகிச்சை, கத்தி,ஊர் தலைவன், இராணுவ தளபதி, வெப்பம், கோடை காலம், நெருப்பு, பூமி, எரிந்த இடம், தங்கம், தாமிரம், நல்ல உணவு, பேச்சு, பாம்பு, சிகப்பு, இரத்தம், கசப்பு காரம் ஆகியனவாகும்.

புதன்

இது சூரியனை சுற்றும் கோள்களில் முதலாவதாகும். அளவில் சிறிய புதன் இராசியில் சூரியனுடன் இணைந்தோ அல்லது ஒரு ராசி முன் பின்னகவோ எப்பொழுதும் இருக்கும். சூரியன் வெள்ளி இதன் நட்பு கிரகங்கள். சந்திரன் பகை கிரகம். செவ்வாய், வியழன், சனி சம கிரகங்கள். இது கன்னி 15 பாகையில் உச்சம் பெறுகிறது. மீனம் 15 பாலையில் நீச்சம் பெறுகிறது. கன்னி 16-20 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இது சுபாவ சுப கிரகம் ஆகும். இதன் காரகங்கள் கல்வி, அறிவு, இலக்கணம், கணிதம், ஜோதிடம், வான சாஸ்திரம், எழுதுதல், தத்துவ அறிவு, பேச்சு திறன், நுண்ணறிவு, பணிவு, அச்சு தொழில், அமைச்சர், வணிகம், கோவில்,குதிரை, மந்திர தந்திர சாஸ்திரம், அலி, சூத்திரர், இலையுதிர் காலம் , பச்சை நிறம், இளவரசர், இளைஞன், தாய் மாமன், தாய் வழி பாட்டன், மருத்துவர், பட்டை தீட்டுதல் (கற்களுக்கு) ஆகியானவாகும்.

வியாழன் (குரு)

நவக்கிரங்களில் மிகுந்த சுபகிரகம் குருவாகும். சூரியன், சந்திரன், செவ்வாய் இதன் நட்பு கிரகங்கள். புதன், வெள்ளி பகை கிரகங்கள். சனி சம கிரகம்.வியாழன் கடகம் 5 பாகையில் உச்சம் பெறுகிறது. மகரம் 5 பாகையில் நீச்சமும் தனுசு 0-10 பாகையில் மூலத்திரிகோண பலமும் பெறுகிறது. இது சுபாவ சுப கிரகம் ஆகும். இதன் காரகதுவங்கள் வாரிசு, பிள்ளைகள், பேரன், சிஷ்யர்கள், தனம், பொக்கிஷம், வேத பாடம், தத்துவ கல்வி,நீதி, சமஸ்கிருதம், உயர் கல்வி, ஜோதிடம், வானவியல்,இலக்கணம், மத சம்பந்தமான கல்வி, பாட்டனார், ஆசிரியர்கள், புனித இடங்கள், கூறிய அறிவு, ஞானம், எழுத்தாளர், தர்மவான், சுய கட்டுப்பாடு, தவம், நீதிபதி, வேத அறிவு, மஞ்சள் துணி, மஞ்சள் புஷ்பராகம், பசுக்கள், யானைகள், தேர், மூத்த் சகோதரர், நண்பர்கள், வட கிழக்கு திசை ஆகியவற்றை குறிக்கும்.

வெள்ளி (சுக்கிரன்)

பிரகாசமான இந்த கிரகம் வெறும் கண்களில் நன்கு தெரியக்கூடியது. சூரிய உதயதின்போதும் அஸ்தமனத்தின்போதும் அடிவானில் தென்படும். இது சுபாவ சுப கிரகம் ஆகும். புதன், சனி ஆகியவை இதன் நண்பர்கள், சூரியன், சந்திரன் இதன் எதிரிகள். செவ்வாய், வியாழன் சம கிரகங்கள். சுக்கிரன் மீனம் 27 பாகையில் உச்சம் பெறுகிறது. கன்னி 27 பாகையில் நீசம் பெறுகிறது. துலாம் 0-15 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இதன காரகதுவங்கள் மனைவி, பெண், திருமணம், மனைவியின் மூலம் இன்பம், கம களியாட்டங்கள், காதல், சோரம் போதல்,பல பெண்களுடன் தொடர்பு,அழகு, வாசனை பொருள் வியாபாரம், வேலையாட்கள்,அரச சன்மானம், ஆபரணங்கள், வைரம், பஞ்சு, கலை, இசை, நடனம், பாட்டு, கவிதை, நாடகம், வாகனம், யானை,குதிரை,பசு,வீணை,புல்லங்குழல் வாசித்தல், வசந்த காலம், தென்கிழக்கு திசை, மத்திம வயது, விவசாயம், படுக்கை அறை, வெண்மை,நெய், தயிர், தங்கம், வெள்ளி, நல்ல உணவு, வைசியர் ஆகியனவாகும்.

நவகிரகங்களில் தொலைதூரத்தில் சுற்றிவருவது சனியாகும். இது ஒரு ராசியை கடக்க சுமார் இரண்டரை வருடங்கள் ஆகின்றது. கருமை நிறத்தை குறிக்கிறது. புதன், சுக்கிரன் இதன் நட்பு கிரகங்களாகும். சூரியன், சந்திரன், செவ்வாய் எதிரிகளாகும். வியாழன் சம கிரகமாகும். இது துலாம் 20 பாகையில் உச்சம் பெறுகிறது. மேஷம் 20 பாகையில் நீசம் பெறுகிறது. கும்பம் 0-20 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இதன் காரகதுவங்கள் ஆயுள், துன்பம், நோய், தடங்கள், வருத்தம், அவமானம், அடிமை தன்மை, கோழைத்தனம், தண்டனை, அசிங்கம், அழுக்கு துணி, அலி, சட்டம் மற்றும் நீதித்துறை அறிவு, உலக இன்பங்களை வெறுத்தல், சூத்திரர்கள், பிச்சை, தீயவர்களுடன் சேர்க்கை, நாடோடி, எருமை, இரும்பு, கருப்பு நிற தானியங்கள்,சாம்பல் , விவசாயம், வேலைக்கரன் ஆக இருத்தல்.



இந்திய ஜோதிடத்தில் ராகு கேதுகள் இடம் பெறுகின்றன. மற்ற கிரகங்கள் போல் அவை பரு பொருட்கள் அல்ல. நிழல் கிரகம் அல்லது சாயா கிரகம் எனப்படும் இவை கணித புள்ளிகள் (Mathematical points) ஆகும். இது சந்திரனின் சுற்றுப்பாதை (orbit) ecliptic எனப்படும் சூரியனின் சுற்று பாதையை வெட்டும் இடமாகும். Ascending Node எனப்படும் ராகு சந்திரனின் சுற்றுவட்ட பாதை (படத்தில் நீல நிறத்தில் இருப்பது) தெற்கிலிருந்து வடக்காக ecliptic ஐ குறுக்கிடும்போது உண்டாகிறது. அதே போல் கேது எனப்படும் Descending Node சந்திரனின் பாதை வடக்கிருந்து தெற்காக ecliptic ஐ வெட்டும்போது நிகழ்கிறது. கிரகணங்கள் ஏற்படுவது இந்த சமயங்களில்தான். அமாவாசை சமயத்தில் சந்திரன் இந்த புள்ளி (node) வழியாக செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதுபோல் பெளர்ணமி சமயத்தில் சந்திரன் இந்த புள்ளியில் இருக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் வரும்போது ஏற்படுகிறது. பெளர்ணமி என்பது சந்திரன் சூரியனுக்கு 180 பாகையில் இருக்கும்போது ஏற்படுகிறது. ராகு கேதுக்கள் எப்பொழுதும் 180 பாகை இடைவெளியில் உள்ளன. மேலும் இவை எதிர் கடிகார சுற்றில் சுற்றுகின்றன.

இந்த கிரங்ககளின் காரகத்துவம் நன்றாக தெரிந்தாலே உங்கள் ஜாதகத்தில் சில விசயங்களை நீங்களே அறியலாம்...உதாரணத்திற்கு சூரியன் உங்கள் ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து பத்தாமிடத்தில் இருந்தால்..தொழில் அல்லது  வருமானம் அரசு வேலை மூலமாகவோ  ,தந்தையின் தொழில் மூலமாகவோ  அமையும்..அது எப்படி ? 

சூரியனினின் காரகத்தை படியுங்கள் , தந்தை,அரசு போன்றவை உள்ளதா ..மேலும் உங்கள் ஜாதக லக்கினத்தில் இருந்து 10 ஆம் இடம் உங்கள் தொழிலை குறிக்கும் உங்கள் தொழிலில் சூரியன் சம்மந்தம் படும் போது அதன் காரகம் அமைகிறது மேலும் ஒரு கேள்வியை நீங்கள் கேட்கலாம் அரசு வேலை கிடைத்தால் எந்த துறை கிடைக்கும் ? அதற்கு இன்னும் கொஞ்சம் ஆராய வேண்டும் அதற்கு சில நுணுக்கங்களை கையாள வேண்டும் அதாவது உங்கள் 10 ஆம் இடம் மீனம் ஆக இருந்தால் அங்கு சூரியன் இருந்தால் ஆசிரியராக அரசு வேலை கிடைக்கலாம் எப்படி ? ப்ளூ பிரிண்ட் இ பாருங்கள் மீனம் ராசியின் அதாவது அந்த வீட்டின் ஓனர் குரு அல்லவே அவருடைய தன்மைகளும் உங்கள் தொழிலில் மாற்றங்களை கொடுக்கும்  குரு,புதன் ஆசிரியரை கல்வி நிறுவனங்களை குறிக்கும் (மேலே சென்று படியுங்கள் குரு , புதன் தன்மைகளை )...உங்கள் ஜாதகத்தில் ல என்பது லக்கினம் நினைவில் கொள்க...அதிலிருந்து 10 ஆம் வீடு உங்கள் தொழிலை குறிக்கும்...

அடுத்த பதிவில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் ...நன்றி 

--------------------கார்த்திக்---------------------------------