Saturday, 8 October 2016

ஜோதிட விளக்கம் 1

ஜோதிட விளக்கம் 1


அனைவருக்கும் வணக்கம்,

நாம் ஜோதிட ரீதியான அறிவியல் சம்மந்தம் பெற்ற சில அரிய விசயங்களை தெடர்ந்து நமது பதிவில் காணஇருக்கிறோம்.. சென்ற பதிவின் தொடர்சியான சில விசயங்களை பற்றி பேசலாம்..பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கலை அதாவது ஆயகலைகள் 64 இல் ஒன்று என்னுடய  பதிவுகள் அனைத்தும் ஜோதிடத்தை மட்டுமே சார்ந்தது நம் வாழ்கை  என்று அறிவுறுத்துவதில்லை...நம் முன்னோர்கள் நமக்காக விட்டு சென்ற இந்த ஜோதிடம்,வேதங்கள்,சாஸ்திரம் இவை எல்லாம் எந்த அளவிற்கு மனித வாழ்க்கையிலும் ,அறிவியல் ரீதியாகவும் பல உண்மைகளை கொண்டுள்ளது என்று வெளிக்கொணரவே பதிவிடப்படுகிறது..மேலும் இப்பதிவின் மூலம் ஆன்மிகமும் அறிவியலும் ஒரே நேர்கோட்டில் தான் பயணிக்கிறது என்று புரிந்து கொள்ள முடியும்..

நாம் பிறக்கும் போது மற்ற கிரங்களின் தாக்கத்தால் ஒருசேர பிறக்கிறோம் அதுவே தான்  நமது ஜனன ஜாதகம் என்று அழைக்கிறார்கள் ..நாம் பிறக்கும் போது நமது பிறந்த தேதி மற்றும் நேரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது...

சரி ஒரு கைபேசி மாடல் வெளியிடப்படுவதற்கு  முன் அதனை டிசைன் செய்வார்கள் அதுதான் ப்ளூ பிரிண்ட் என்று அழைக்கப்படும் அது போல ஜோதிடத்தின் ப்ளூ பிரிண்ட் அடிப்படையான ராசி கட்ட விளக்கம்

அப்படி என்றால் என்ன ? வருகிற படத்ததை பார்த்து நீங்களே தெளிவு பெறலாம்

இதுதான் ஜாதகத்தின் ப்ளூ பிரிண்ட்...ஒவ்வொரு ராசியிலும் கிரங்கள் உள்ளன உதாரணத்திற்கு மேஷம் இல் செவ்வாய் ,ரிஷபதில் இல் சுக்கிரன் ,மிதுனத்தில் புதன் and  so  on ...என்னது இதுல புரியலேயே என்று நீங்கள் நினைக்கலாம்...அதாவது ஒவ்வொரு ராசியிலும் இருக்கும் கிரங்கள் அந்த ராசியின் அதிபதிகள் என்று சொல்கிறார்கள்
 (lord of  the   house )

கிரங்கள் தனது சொந்த வீட்டில் இருக்கும் போது  வலு பெரும் உதாரணத்திற்கு உங்கள் ஜாதகத்தில் சிம்மத்தில் சூரியன் உள்ளது என்றால் சூரியன் தன் சொந்த வீட்டில் உள்ளார் என்று அர்த்தம் மேல உள்ள ப்ளூ பிரிண்ட் மூலம் தெரியும் சிம்மத்தில் சூரியன் தன் சொந்த வீடாகும் என்று..
சரி சொந்த வீட்ல கிரகம் இருந்தால் எப்படி வலுவாக இருக்கும் என்று சொல்றிங்க ?

நல்ல கேள்வி ...

நீங்க சென்னைல இருக்கீங்க அங்க ஒரு வாடகை வீட்ல இருக்கீங்க உங்களால    சுதந்திரமா செயல்படமுடியுமா ? ...ஹவுஸ் ஓனர் வருவான் தம்பி 9 மணிக்கு மேல லைட் எறியக்கூடாதுனு சொல்வான் அத பண்ணாத இதபண்ணாத னு படுத்துவான் உங்களால நெனைக்கற வேலைய ஒழுங்கா செய்யமுடியுமா இதுவே சொந்த வீடா  இருந்த படுத்த படுக்கையை எடுக்கமாட்டோம் ,டீ குடிச்ச டம்ளரை கழுவமாட்டோம் அதன் அம்மா ங்கிற ஒருத்தி இருக்கறதால problem  இல்லை ...எதுக்கு சொல்கிறேன் என்றால் சொந்த வீட்டில் நாமா சுதந்திரமாக செயல்படமுடியும்...இந்த விதி தான் கிரகங்களுக்கும் அவைகள் தன்னுடைய சொந்த வீட்டில் இருக்கும் போது தன்னுடைய வேலையை முழுமையாக செய்யும்..தன்னுடைய பலன்களை முழுமையாக செய்யும்..

மேலும் இன்னொரு கேள்வியும் நீங்கள் கேட்கலாம் அதாவது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சில வருடங்களுக்கு முன்  வெளியிட்ட  கிரகவரிசை ராசி கட்டத்தில் உள்ளது என்று சொல்கிறீர்கள் ஆனால் ப்ளூ பிரிண்ட் ராசி கட்டத்தில் புதன்,சுக்கிரன்,செவ்வாய் ,குரு ,சனி வரிசை ஓகே தான்  ஏன் அவை இரட்டிப்பாக உள்ளது ஆனால் சூரியன் ,சந்திரன் ஒன்று மட்டும்தான் உள்ளது என்ன கணக்கு இது...

புரிகிறது...அதாவது ஜோதிடம்  அறிவியல் மட்டும் இல்லை ஆன்மீகமும்  பிரபஞ்சமும் சேர்ந்தது என்பதை அடிக்கடி நினைவில் கொள்ளவேண்டும்...
இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் இரு இனங்கள் உண்டு ஒன்று ஆண்  மறறொன்று பெண் இல்லையா ...அதாவது சக்தி இல்லையேல் சிவம் இல்லை சிவம் இல்லையேல் சக்தி இல்லை ...

அதன் படி ஜோதிட ரீதியாக சூரியன் தந்தை கு உரிய கிரகம் ..சந்திரன் தாய்க்கு உரிய கிரகம் ...சூரியன் அதி தேவதை சிவனாகவும் சந்திரன் அதி தேவதை பராசக்தியாகவும் எடுத்து கொள்ள வேண்டும் ..அதன் வழியில் சூரியனை சார்ந்து clock wise  புதன்,சுக்கிரன்,செவ்வாய் ,குரு ,சனி ...சந்திரனை சார்ந்து anti  clock wise  புதன் ,சுக்கிரன் ,செவ்வாய் ,குரு ,சனி ராசி கட்ட ப்ளூ பிரிண்ட் அமைய பெற்றுள்ளது... எப்படி இருந்தாலும் அறிவியல் ரீதியாக கிரகவரிசை மாறவில்லை...

சரி இன்னொரு முக்கியமான விசியம் கோவிலுக்கு  போகும் போது நவ கிரக சிலைகளை பாருங்கள் செவ்வாய்க்கு சிகப்பு துணியும் ,குருவுக்கு மஞ்சள் துணியும் ,சனி பகவானுக்கு கருப்பு துணியும் இருக்கும் இது 3000 வருடங்களுக்கு முன்பே செவ்வாய் அதாவது மார்ஸ் சிகப்பு நிறமுடையது ,குரு அதாவது ஜுபிடர் மஞ்சள் நிறமுடையது ,சனி அதாவது satun  கருப்பு நிற உடையது என்று நம் முன்னோர்கள் கண்டு பிடித்து விட்டனர் ...நாசா போன்ற விண்வெளி ஆராய்சி மையங்கள் சில வருடங்களுக்கு முன்புதான் கண்டுபிடித்து கூறியுள்ளது...
ஆகவே நமக்கும் மேலே ஒரு பரமாத்மா  உள்ளது என்று பய பக்தியோடு கடவுளை வணங்குவோம் மதம் வேறாக இருந்தாலும் கடவுள் ஒருவனே நமக்கும் அனைத்தும் என்று உண்ர்ந்து ..தர்ம வழியிலும் ,பிற உயிர்களை துன்புறுத்தாமல் அன்பு செலுத்தி வாழ்வோமானால் கடவுள் நம்முள்ளே வாழ்கிறான்  என்று அர்த்தம் ...மீண்டும் சில முக்கிய பதிவுகளுடன் உங்களை சந்திக்கிறேன்..

--------கார்த்திக்



No comments:

Post a Comment